Wednesday, December 17, 2014

ANACARDIUM ORIENTALE - அனகார்டியம் ஓரியண்டேல்






 ANACARDIUM  ORIENTALE  - அனகார்டியம் ஓரியண்டேல்







ANACARDIUM  ORIENTALE  - அனகார்டியம் ஓரியண்டேல்

சலவை தொழிலாளிகள் குறிக்கு பயன்படுத்தும் கொட்டை

இம் மருந்து அரை பைத்தியங்களுக்கு தேவைப்படும் மருந்தாகும். இந்த பைத்தியத்தின் மனம் எப்படியிருக்கும் என்றால், வயிறு நிறைய கல்யாண வீட்டு பந்தியில் சாப்பிடுவார்கள். பிறகு கை கழுவிக்கொண்டு அடுத்த பந்தியில் மற்றவர்கள் உட்கார்ந்து சாப்பிடும் போது இவரும் உட்கார்ந்து சாப்பிடுவார்கள். முன்பு சாப்பிட்ட அளவே சாப்பிடுவார்கள். இவ்வளவு விரைவான பசிக்கு இது ஒன்றே மருந்து. இதனால் சாப்பிட்டு கை கழுவியதும், உடனே ஜீரணம் ஆகிவிடும். அடுத்த வேலை சாப்பிடும் வரை பசியோடு தான் இருப்பார்கள். இதனால் பசியின் வேதனையும், கொடுமையும், அகோர பசியும் ஏற்பட்டு விடுவதால் உண்மையை பொய் என்று சொல்லி பொய் சத்தியம் செய்வதும், உணவு கிடைக்கவில்லை என்பதால் பொறாமை உணர்வும் வரும். சாபம் வைக்கும் குணமும், கணவன், பிள்ளைகளை கூட நாசமாக போ என்று மண்ணை வாரி தூற்றுவதும், நெட்டி முறிப்பதும் இவர்கள் செய்வார்கள். நள்ளிரவில் மூச்சி திணறி எழுவார்கள். ANAC, GRANT, LACH. உறுப்புகளில் கருப்பு நிற இரத்தம் வடியும். இரட்டை, இரட்டை எண்ணமாக தோன்றும். அதாவது ஒருவரை பார்த்து பேசலாமா? வேண்டாமா, நல்லவர்களா, கெட்டவர்களாக இருப்பார்களா? இந்த வேலை செய்யலாமா, அந்த வேலை செய்யலாமா, என்று இரட்டை இரட்டையாக எண்ணம் தோன்றும். பெண் கடைக்கு போனால் இரண்டு சேலை எடுத்துக் கொண்டு () இரண்டு நகையை எடுத்துக்கொண்டு, இரண்டு பொருள்களை எடுத்துக்கொண்டு, இதை எடுப்பதா, அதை எடுப்பதா என்று ஒரு முடிவு எடுக்க முடியாமல் போராடிக் கொண்டு இருக்கும் பெண்கள் இவர்களே. இதே போல இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய முடியாத ஆண்களோ பெண்களோ இவர்களே. இந்த மருந்தைக் கொடுத்தால் ஒரு முடிவு எடுப்பார்கள். தலைவலியோ, வயிற்று வலியோ,எந்த நோயாக இருந்தாலும் சாப்பிட்டால் சரியாகிவிடும். உடன் KALI- BR, SEP, THUJ, CALC-P. என்னிடம் இரண்டு சாமி இருக்குது, மூன்று சாமி இருக்குது என்றும், ஒரு தோல் பட்டையில் தேவதை உட்கார்ந்து இருக்கிறது என்றும், அடுத்த தோல் பட்டையில் இராட்சஸி உட்கார்ந்து இருக்கிறது என்றும் கூறுவார்கள். பொய்யோ, பிடிவாதமோ, தான் சொன்னது இல்லை என்றாலும், இருக்கிறது என்றாலும் அதையே சாதிப்பார். உருளைக் கட்டையை எடுத்து, தொடையில் அடித்த மாதிரி இருக்கிறதுங்க என்பார்கள். பேசி கொண்டு இருக்கும் போது பாதியை மறந்து விடுவார்கள். ஞாபக மறதிக்கு இது தான் பெரிய மருந்து. மலவாய் சுருங்கி அடைத்து விடும். கொஞ்சம் மலம் வந்து பின்பு அடைத்து கொண்டால் இங்கு ALOE-S, NUX-V. துன்பத்திலும், சாவு வீட்டிலும் கூட இவர் சிரித்து கொண்டே இருப்பார்கள். கொலை செய்த விட்டு கூட அசால்ட்டாக இருப்பார்கள். மற்றொரு வேடிக்கை என்னவென்றால் கொலையோ, மற்ற கோரமான செயல்களையோ, செய்து விட்டு அங்கு உள்ளவர்களிடம் இந்த கொடுமையை யார் செய்தது என்று விசாரிப்பார்கள். அதற்கு காரணம் அவரிடம் உள்ள இரண்டு வித எண்ணம் தான். அதற்கு அடிப்படை காரணம் பசி ஒன்று தான். எல்லா துன்பங்களுக்கும் பசியே மூல காரணம்.




 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------

 


Please Contact for Appointment