Friday, December 19, 2014

CHLOROFORMIUM - குளோரோபோர்மியம்






 CHLOROFORMIUM  - குளோரோபோர்மியம்









CHLOROFORMIUM  - குளோரோபோர்மியம்

வீரியபடுத்தபட்ட மயக்க மருந்து.

அறுவை சிகிச்சையின் போது குறிப்பிட்ட பகுதியில் உணர்வு தெரியாமல் இருப்பதற்க்காக இது தரப்படுகிறது. இப்படி உணர்வு தெரியாமல் இருக்க பயன்படுத்திய பிறகு அப்பகுதி தளர்ந்து விடும். நாடி பலஹீனமாகவும், அதிகமாகவும் துடிக்கும். சுவாசம் மெதுவாகயிருக்கும் திடீர் என அதிகமாகவும,; மூச்சு வாங்கும் வலிப்பு வந்த மாதிரி. மூத்திர காய்கள் கெட்டு சிறுநீர் உற்பத்தி செய்ய முடியாமல் அப்பகுதியில் வலி ஏற்படும், வாயு உற்பத்தி அதிகமாகும். DR.D.MACFARLAN என்பவர் மேலே கண்ட குறிகளுக்கு இம் மருந்தை கொடுத்து நோயாளிகளின் கஷ்டத்தை போக்கியதாக கூறுகிறார். வலது கால் மூட்டில் பலஹீனம் ஏற்படும். காற்று நிறைய தேவை அதனால் அதிகமாக மூச்சு இழுத்து, இழுத்து விடுவார்கள். அவர்கள் முகம் மற்றும் மார்பு பகுதியில் நன்றாகவே தெரியும் மற்றும் அப்பகுதியில் வீக்கமும் இருக்கும். முகம் மட்டும் கருப்பாகயிருக்கும். தொண்டையும், உதடும், வறட்சியாகயிருக்கும். இரவு நேரத்தில் வறட்டு இரும்பல் ஏற்படும். சாப்பிட்ட சாப்பாடு மீண்டும் வாய்க்கு வரும், அது ஊசி போன மாதிரியும், புளிச்ச மாதிரியும் வாய்க்கு வந்து கொண்டிருக்கும். மலக் காற்று பிரியும் இது இறைப்பை சம்பந்தப்பட்ட நோய் குறிகளே காட்டும். இதயத்தை சுற்றிலும் பிடித்து ()நசுக்கி விடுகிற மாதிரி வலி. வலது புற மார்பு பகுதியில் ஊசியில் குத்தற மாதிரி வலி அதனால் மூச்சு இழுத்து, இழுத்து விடுவார்கள்;. இது முக்கிய குறி. சில நேரங்களில் துடிப்பு அதிகமாகவும், குட்டை, குட்டையான சுவாசமும் இருக்கும். தலை:- தலை பகுதியில் பயங்கரமான தொல்லைகள் தாக்கி கொண்டேயிருக்கும். அதனால் இவர்கள் உளறி கொண்டேயிருப்பார்கள். அப்படியே தலையை தோள்பட்டையின் மீது போட்டு கிடப்பார்கள். கண்கள் திறந்த நிலையிலேயே இருக்கும். கண்ணை மூடினாலும் திக்கு, திக்குன்னு விழித்து பார்ப்பார்கள் பயத்தினால். கருவிழி, ஆடி, சுத்தும். வலிப்புகாரர்கள் மாதிரி, முக தசைகள் ஆடும். பின்பு கை, காலும் ஆடும். இவைகள் எல்லாமே ஆப்ரேஷனுக்காக தரப்படும் மயக்க மருந்தின் பின் விளைவுகள் தான் இவ்வளவும். உறவு:- ஈதர் கொடுத்து நுரையீரல் ஆபேரஷனுக்கு பிறகு, மூத்திரகாயிகளின் ஆபரேஷனுக்கு பிறகு, இருதய வால்வு ஆபரேஷனுக்கு பிறகு, தங்கியிருக்கும் மயக்க மருந்தை முறிக்க குறைந்த வீரியத்தில் தரலாம் என்று நிரூபணம் Dr. BIER உயர் வீரியமும் பொருந்தலாம் என்று கூறுகிறார். மற்றும் PHOS ம் பொருந்தும் பார்த்து கொள்ளனும். இடுப்புக்கு கீழே போடுகிற மருந்து, விலை குறைவு என்றும், உடல் முழுவதும் மயக்கம் அடைவது அதிகம் என்றும், ஹலோபதியில் கூறுகிறார்கள். அதனால் மருந்தின் பக்க விளைவு எப்படி இருக்கும்?





 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------







Please Contact for Appointment