Saturday, February 2, 2019

எருக்கு - Erukku மருத்துவப் பயன்கள்







எருக்கு




வளரியல்பு: செடிகள் சில இடங்களில் புதர்ச்செடி அமைப்பிலும் காணப்படும்.


தாவர விளக்கம்: அகன்ற எதிரடுக்கில் அமைந்த இலைகளையுடைய, பெரிய, நேராக வளரும் பாலுள்ள செடிகள். செடி முழுவதும் வெண்மையான மாவு படர்ந்து போலக் காணப்படும். பெரும்பாலும் கத்தரிப்பூ நிறமான மலர்கள் கொண்டவை. அரிதாக வெள்ளை நிறமான பூக்களுடனும் காணப்படும். பச்சையான காய்களில் உள்ள விதைகள் மென்மையான வெள்ளைப்பஞ்சுடன் கூடியவை. இவை காற்றில் பறக்க் கூடியவை. லை, பட்டை, வேர், பூ, பால் ஆகியவை சிறந்த மருத்துவப் பயன் கொண்டவை, வெப்பமண்டல நாடுகள் அனைத்திலும் வளர்பவை. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் தானே வளர்கின்றது.
வெள்ளெருக்கன் செடியின் வேரிலிருந்து வினாயகர் போன்ற சுவாமி விக்கிரங்கள் செய்து வணங்குவார்கள். வெள்ளெருக்கன் வேர்க் கட்டை வீட்டில் இருந்தால், பூச்சிகள், விஷவண்டுகள் வராது என்கிற நம்பிக்கை சார்ந்த நடைமுறையும் நமது மக்களிடையே உள்ளது.


மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

தாவரம் பொதுவாக காரச்சுவையும் வெப்ப தன்மையும் கொண்டது. இலை வாந்தியுண்டாக்குதல், பித்தம் பெருக்குதல், வீக்கம், கட்டிகளைக் கரைத்தல் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது. பூ, பட்டை ஆகியவை கோழையகற்றும்; பசியுண்டாக்கும்; செரிப்புண்டாக்கும்; உடல் உரமாக்கும் பால், புண்களை ஏற்படுத்தும்.
பெரியவர்களுக்கான மருத்துவத்தில் மட்டுமே எருக்கு உள்மருந்தாக உபயோகிக்கப்படலாம்.


குதிகால் வாதம் குணமாக

Ø  நன்றாக நெருப்பில் சுட்ட சூடான செங்கல் மீது எருக்கன் பழுப்பு இலைகள் மூன்றை வைத்து அதன் மீது பாதிக்கப்பட்ட குதிகாலை ஐந்து நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். 3 நாட்கள் இவ்வாறு செய்யலாம்.


இரைப்பு நோய் கட்டுப்பட

Ø  பூ ஒரு பங்கு, மிளகு ஒரு பங்கு, கிராம்பு அரைப்பங்கு சேர்த்து அரைத்து, மிளகு அளவு உருண்டையாக்கி, காய வைத்து, தேனில் 2 உருண்டைகள் கரைத்து சாப்பிட வேண்டும்.


மார்பில் கட்டிய கோழை வெளியாக

Ø  வெள்ளெருக்கன் பூக்களைச் சேகரித்து காம்பு உள் நரம்புகள் ஆகியவற்றை நீக்கி, சிறிது மிளகு சேர்த்து அரைத்து, மிளகு அளவு மாத்திரைகளாகச் செய்துக் கொள்ள வேண்டும். இந்த மாத்திரையில், வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் மூன்று வேளைகள் தேனில் உரைத்து சாப்பிட வேண்டும்.


கட்டிகள் உடைய

Ø  இலையை வதக்கி இளஞ்சூட்டோடு வைத்துக் கட்டினால் கட்டி பழுத்துச் சீக்கிரமாக உடையும் அல்லது நன்கு முதிர்ச்சியடைந்த எருக்கன் செடியிலிருந்து பழுப்பான இலைகளைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, அனலில் வதக்கிச் சாறு பிழிந்து, அத்துடன் சிறிதளவு சுண்ணாம்பு மற்றும் தேன் கலந்து நன்றாகக் குழைத்துக் கொள்ள வேண்டும். இதனை வெளி உபயோகத்திற்கான பூசு மருந்தாக உபயோகிக்கலாம்.


நாள்பட்ட புண்கள் குணமாக

Ø  உலர்த்தி பொடியாக்கிய இலையுடன் விளக்கெண்ணெய் சேர்த்துத் தடவ வேண்டும்.


குளவி, தேனீ, தேள் கொட்டு விஷம் முறிய

Ø  அவை கொட்டிய இடத்தில் பாலைத் தடவ விஷம் இறங்கும்.


பல் நோய், பல் சொத்தை குணமாக

Ø  பாலைத் தொட்டு பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் பூசலாம்.


வயிற்றுப்புழுக்கள் வெளியாக

Ø  3 துளி இலைச்சாறு, 10 துளி தேன் விட்டு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும்


குஷ்ட நோய் கட்டுப்பட

Ø எருக்கின் வேர் சூரணத்தை ஆமணக்கு எண்ணெய் விட்டு தடவி வர வேண்டும்.

Please Contact for Appointment