Friday, February 1, 2019

இஞ்சி - Inji மருத்துவப் பயன்கள்







இஞ்சி



 வளரியல்பு: செடிகள் இரு ஆண்டுகள் வாழ்பவை.


தாவர விளக்கம்: மணமுள்ள கிழங்குகளை உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் பரவலாகப் பயிர் செய்யப்படுகின்றது. கிழங்குகளே பொதுவாக இஞ்சி எனப்படுபவை இவை மருத்துவப் பண்பும், உணவு உபயோகமும் உள்ளவை. வாசனைக்காகவும், காரத்திற்காகவும் இது உணவில் சேர்க்கப்படுகின்றது. இது, பசியைத்தூண்டும், உமிழ்நீரைப் பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை அளித்து குடலிலுள்ள வாயுவை நீக்கும் மணற்பாங்கான நிலங்களில் இஞ்சி எராளமாக பயிராகின்றது. தமிழகம், பஞ்சாப் மாநிலங்களிலும், வங்காள தேசத்திலும் அதிகமாக விளைகின்றது. நன்றாகக் காயவைத்துப் பதப்படுத்தப்பட்ட இஞ்சியின் கிழங்குகளே சுக்கு எனப்படுபவை. இஞ்சியின் எல்லா மருத்துவக் குணங்களும் இதற்கும் உண்டு. சுக்கு, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.


மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

இஞ்சி கிழங்குகள் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இவை வியர்வை மற்றும் உமிழ்நீர் பெருக்கியாகவும் பசித்தூண்டியாகவும் வாயுவை அகற்றும் மருந்தாகவும் செயல்படும். காசம், பம், பித்தம், வாதசுரம் ஆகியவற்றையும் போக்கும்.


பசியின்மை, வயிற்றுப் பொருமல் தீர

Ø  முற்றிய பசுமையான இஞ்சியின் மேல் தோலைச் சீவி நீக்கவும். பின்னர், சிறு துண்டுகளாக நறுக்கி, சுத்தமான தேனில் இஞ்சித் துண்டுகள் மூழ்கியிருக்குமாறு ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பின்னர், தினமும் இரண்டு துண்டுகள் வீதம் உணவிற்கு முன்னர் மென்று சாப்பிட வேண்டும்.


குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணத்திற்கு

Ø  இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றிப் பற்றுப் போட வேண்டும்.


வயிற்று வலி மற்றும் வயிறு கனமாக இருத்தல் குணமாக

Ø  இஞ்சிசாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி சாறுடன் சிறிதளவு தேன் கலந்து, 2 அல்லது 3 நாட்களுக்கு தினமும் மூன்று வேளைகள் குடிக்க வேண்டும்.


சளியுடன் கூடிய இருமல் கட்டுப்பட

Ø  இஞ்சியை இடித்துச் சாறு எடுக்கவும். ஒரு தேக்கரண்டி அளவு சாறுடன், சிறிதளவு தேன் கலந்து, தினமும் மூன்று வேளைகள், 7 நாட்களுக்குப் பருகவும்.


இளமை நிலைத்திருக்க

Ø  இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, தேனில் 48 நாட்கள் ஊற வைக்க வேண்டும். தினந்தோறும், காலையில், ஒரு துண்டு வீதம் சாப்பிட்டு வர வேண்டும். நீண்ட நாட்கள் தொடர்ந்து இவ்வாறு செய்து வர நரை, திரை, மூப்பு அணுகாது. தேகம் அழகுபெறும் மனம் பலப்படும்


தலைவலி தீர

Ø  சுக்கைப் பொடி செய்யவும். அரைத் தேக்கரண்டி அளவு பொடியைச் சிறிது தண்ணீர் கலந்து, சூடாக்கி, பசை போலச் செய்து கொண்டு, வலி இருக்கும் இடத்தில் பசையைப் பரவலாகத் தடவ வேண்டும்.


வாந்தி கட்டுப்பட

Ø  இஞ்சிச் சாறும் வெங்காயச் சாறும் வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து, கலந்து சிறிதளவு தேன் சேர்த்து உள்ளுக்கு சாப்பிட வேண்டும்.


Please Contact for Appointment