Tuesday, February 5, 2019

கடுகு - Kadugu மருத்துவப் பயன்கள்





கடுகு



வளரியல்பு: சிறுசெடி


தாவர விளக்கம்: ஓராண்டு உயிர் வாழும் தாவரம். 1மீ. வரை உயரமானவை. பூக்கள் நுனியில் கொத்தாக அமைந்தவை, மஞ்சள் நிறமானவை. விதைகள் கடுகு எனப்படுபவை. வெள்ளைக் கடுகு மற்றும் சமையலில் பயன்படுத்தும் கடுகு என இரண்டு வகைகள் உண்டு. கடுகில் இருந்து பெறப்படுவது கடுகு ண்ணெய் ஆகும். விதைகள் பெருமளவில், உணவு மற்றும் மருத்துவ உபயோகங்களுக்கு பயிர் செய்யப்படுகின்றன. தமிழகத்தில், பெரும்பாலும் துணைப் பயிராகவும், தரிசு நிலங்களிலும், சமவெளிப் பகுதிகளிலும் கூட வளர்கின்றன. சமையல் கடுகு மளிகைக் கடைகளில் சாதாரணமாகக் கிடைப்பதாகும். நம் அனைவருக்கும் நன்கு பழக்கமானதாகும். கடுகு ண்ணெய் மற்றும் வெள்ளைக்கடுகு ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.


மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

கடுகு காரச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. குன்மம், வாதநோய் ஆகியவைகளைக் குணமாக்கும்; ஜீரண உறுப்புக்களைப் பலப்படுத்தும்; வாந்தியுண்டாக்கும்; சிறுநீர் பெருக்கும்; விஷத்தை முறிக்கும். பாக்டீரியாக்கள் போன்ற கிருமிகளை அழிக்கும். மருத்துவக் குணத்தால் கடுகை, ஊறுகாய், தொக்கு போன்றவற்றிலும் சேர்க்கிறார்கள். இதனால், இவை கெட்டுப் போகாமல் பாதுகாக்கப்படும். கடுகு ண்ணெய் நெடியும் விறுவிறுப்பும் கொண்டதாகும். தோல் நோய்களைக் குணமாக்கும்.

குறிப்பு: இந்தப் பகுதியில் கடுகு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது அனைத்தும் கடுகுச் செடியிலிருந்து பெறப்படும் விதைகளையே குறிக்கும்.


கட்டிகள் உடைய

Ø  தேவையான அளவு கடுகை, தேனுடன் சேர்த்து அரைத்து, பசையாகச் செய்து, கட்டிகளின் மீது பூச வேண்டும்.

Ø கிரந்திப்புண், தோல் நோய்கள் குணமாக கடுகு எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் மேல்பூச்சாகப் பூசி வர வேண்டும்.


குடிபோதை மாற

Ø  ஒரு தேக்கரண்டி கடுகை, நீர் சேர்த்து அரைத்து, குடிக்கக் கொடுத்தால் வாந்தியுண்டாகும்; குடிபோதை மாறும்.


வெள்ளைக்கடுகு  விதைகள் – Brassica alba

காரச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை. குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்களைப் போக்கும்; முடக்குவாத நோயைக் கட்டுப்படுத்தும்; பூச்சிக்கடி விஷத்தைக் குறைக்கும். விஷத்தை உட்கொண்டவர்களுக்கு இதனை நீரில் ஊற வைத்து, நெல்லிக்காய் அளவு அரைத்துக் கொடுக்க, குமட்டல் இன்றி வாந்தியை உண்டாக்கி நஞ்சை வெளியேற்றும். கடுகை அரைத்து, பருத்தித் துணியில் தடவி, கீல்வாயு, இரத்தக்கட்டு உள்ள இடங்களில் பற்றாகப் போட அவை குணமாகும். ¼ தேக்கரண்டி அளவு வெள்ளைக்கடுகைத் தூளாக்கி, தேனில் குழைத்து உள்ளுக்குச் சாப்பிட இரைப்பு, இருமல், சுவாச நோய்கள் குணமாகும்.


Please Contact for Appointment