Tuesday, February 5, 2019

கடுக்காய் - Kadukkai மருத்துவப் பயன்கள்







கடுக்காய்



வளரியல்பு: மரம்


தாவர விளக்கம்: 25 மீட்டர்கள் வரை உயரமாக வளரக் கூடிய, பல்லாண்டுகள் வாழும் தாவரம். பசுமையான தனித்த இலைகள் 10 முதல் 20 செ.மீ. நீளத்திலும், நீள்வட்டமாகவும், கிளைகளின் முடிவில் எதிரெதிர் ணைகளாகவும் காணப்படும். பூக்கள், மங்கிய வெண்மை நிறமானவை,  கிளைகளின் நுனியில் காணப்படும். முதிராத கனிகள் பசுமையானவை. முதிர்ந்த கனிகள் மஞ்சளானவை. 2-4 செ.மீ. நீளமானவை. பொதுவாக, 5 தெளிவற்ற கோடுகள் கனித்தோலில் காப்படும். சமவெளியில் அரிதாக இந்த மரங்கள் வளர்கின்றன.  மலைப்பகுதிகளில் பரவலாக வளர்கின்றன. மலைகளில் வளர்பவை பெரிய கனிகளுடன் காணப்படும். இதன் மருத்துவப் பயன்களுக்காகவும் சாயமேற்றுதல் பயன்களுக்காகவும் ஏற்றுமதி செய்யப்படுகின்ற. அபையன், அமுதம், ரோகிணி, ஜீவந்தி ஆகிய முக்கிய மாற்றுப் பெயர்களும் கடுக்காய்க்கு உண்டு. காய்ந்த கடுக்காய் மற்றும் கடுக்காய் சூரணம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

சேலம் மாவட்டத்தில் விளையும் கடுக்காய் உலகத் தரம் வாய்ந்தது.


மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

வறட்சி, பசியின்மை, தோல் நோய்கள், குடல் புண்கள், காமாலை, பல் நோய், ண் நோய்கள், கோழை, மூலம், இருமல் ஆகியன தீரும். காயங்களை ஆற்றுவதற்கும், தீப்புண்களை ஆற்றுவதற்கும் கடுக்காய் முக்கியமானதாகும்.

    பழங்கால இலக்கியங்களில் வலி நிவாரணி எனப் பொருள்படும். அப்யதா என்கிற பெயரில் அழைக்கப்பட்டது. அறுசுவைகளில் உப்புச் சுவை தவிர பிற சுவைகள் இதில் அடங்கியுள்ளன.

எச்சரிக்கை

è சீரண சக்தி குறைந்திருப்பவர்கள், பசியுடன்-பட்டினியாக இருப்போர், கர்ப்பிணிகள் ஆகியோர் கடுக்காயை உட்கொள்வதை தவிர்த்துவிடவும். உள்ளுக்கு சாப்பிடும் மருத்துவத்தில் பயன்படுத்துவோர் கடுக்காயின் உள்ளிருக்கும் விதையை நீக்கிய பின்னரே மருந்தில் சேர்க்க வேண்டும்.

கடுக்காய் தூள் அல்லது கடுக்காய் சூரணம்: கடுக்காயைக் கொட்டை நீக்கி,  மேல் தோலைச் சேகரித்து, காய வைத்து, தூள் செய்து, பருத்தி துணியில் சலித்து, பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்.


வயிற்றுப் போக்கு தீர

Ø  கடுக்காய் தூள் ½ தேக்கரண்டி அளவு, தினமும் இரு வேளைகள், மோரில் சாப்பிட வேண்டும்.


செரியாமை மற்றும் மலச்சிக்கல் தீர

Ø  கடுக்காய் தூள் ½ தேக்கரண்டி அளவு இரவில், 7 நாட்களுக்கு, வெந்நீரில் சாப்பிட்டு வர வேண்டும்.

Ø  கடுக்காய் தோல் குடிநீர் கருப்பைப் புண் உள்பட பல வகைப் புண்களை ஆற்றப் பயன்படுத்தப்படுகின்றது.


ஈறுவலி, பல்வலி, ஈறிலிருந்து இரத்தம் கசிதல் குணமாக

Ø  கடுக்காய் தூள், சம அளவு உப்புத்தூளுடன் சேர்த்து பல் துலக்கி வர வேண்டும்.


ஈரல் விருத்தியடைய

Ø  கடுக்காயத் தூள், இரவில், ஒரு தேக்கரண்டி அளவு, வெந்நீரில் கலந்து குடிக்க வேண்டும். 21 நாட்கள் வரை இவ்வாறு செய்யலாம்.


திரிபலா சூம்: விதை நீக்கிய நிலையில் உள்ள கடுக்காய்தான்றிக்காய், நெல்லிக்காய் மூன்றையும் தனித்தனியாக காய வைத்து, தூள் செய்து வைத்துக் கொண்டு, சம அளவாக ஒன்றாகக் கூட்டி நன்கு கலந்து, காற்றுப்புகாத கண்ணாடி சீசாவில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவே திரிபலம் அல்லது திரிபலா சூம் எனப்படும் ஒரு பலநோக்கு கை மருந்து ஆகும். புளியேப்பம், செரியாமை, அஜீரம், மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகளுக்கு ஒரு தேக்கரண்டி பொடியை வாயிலிட்டு, வெந்நீர் அருந்திப் பாருங்களேன். இதை ஒரு மந்திர மருந்தாக உணர்வீர்கள்.

Please Contact for Appointment