Saturday, February 2, 2019

ஊமத்தை - oomathai மருத்துவப் பயன்கள்







ஊமத்தை



வளரியல்பு: செடிகள்


தாவர விளக்கம்: 1 மீட்டர் வரை உயரமாக வளரும் தாவரம். அகன்ற பசுமையான இலைகள், நீள்வட்ட வடிவில் காணப்படும். வாயகன்று, நீண்ட குழலுள்ள புனல் போன்ற அமைப்பில் வெள்ளை நிறமான மலர்கள் காணப்படும். தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும், சாலை ஓரங்கள், தரிசு நிலங்களில் விளைகின்றது. உம்மத்தை, ஊமத்தான், வெள்ளூமத்தை, காட்டு ஊமத்தை ஆகிய பெயர்களும் உண்டு. மருத்துவக் குணம் பொதுவானது. காய்,  உருண்டையாகவும் பசுமையான முட்கள் அடர்ந்ததாகவும் இருக்கும். இலை, பூ, காய், விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.
மலைப்பாங்கான பகுதிகளில் வளரும் ஊமத்தை நீலநிறமான இதழ்களுடன் காணப்படுவதுண்டு (நீல ஊமத்தை/கரூஊமத்தை). அரிதாக அடுக்கு இதழ்களால் ஆன மலர்களும் உண்டு. (அடுக்கு ஊமத்தை) மருத்துவப் பயன் பொதுவாக அனைத்திற்கும் ஒன்றே ஆகும்.
பழங்கால இந்திய மருத்துவ மற்றும் இலக்கிய நூல்களில் ஊமத்தை சிவசேகரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பூ சிவபெருமானுடன் (வழிபாட்டில்) தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.


மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்

காரத்தன்மையும் கைப்புச்சுவையும் கொண்ட தாவரம்; வாந்தியுண்டாக்கும்; இசிவைப் போக்கும்; உமிழ்நீரைக் கட்டுப்டுத்தும்; பசியைக் குறைக்கும்; தூக்கத்தை தூண்டும். வாதநோய்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் நரம்புகளைப் பலப்படுத்தும். வெளிப்பூச்சுத் தைலங்களில் இது சேர்க்கப்படுகின்றது.
இத்தாவரத்தின் முக்கியமாக செயல்படும் மூலப்பொருள், இதன் இலை மற்றும் விதைகளிலுள்ள, ‘ஹையோசயமின்என்கிற மருந்துப் பொருள் ஆகும். இது மூச்சுக்குழல் அழற்சி, காச நோய்க்கு ஏற்ற மருந்தாகும்.
ஊமத்தை, கெட்ட மணத்தையும், உட்கொண்டால் மயக்கத்தையும் வெறியையும் கொடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது. சாராயம் போன்ற போதைப் பொருட்களில் இது சேர்க்கப்படுகின்றது.


சுவாசகாசம், வறட்டு இருமல் குணமாக


Ø  இலை அல்லது பூவை அல்லது இரண்டையுமே உலர்த்தி சுருட்டுப் போல செய்து புகை பிடிப்பது போலச் செய்து புகையை உள்ளிழுத்து வெளியிடுவதால் சுவாசகாசம் குணமாகும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் செய்யலாம். தலைச்சுற்றல், வாய்க்குமட்டல் போன்றவை ஏற்பட்டால் உடனே இவ்வாறு செய்வதை நிறுத்திவிட வேண்டும்.


புண்கள், அழுகிய புண்கள் குணமாக

Ø  ½ லிட்டர் தேங்காய் எண்ணெயில் 1/2 லிட்டர் ஊமத்தை இலைச்சாற்றைக் கலந்து, அடுப்பில் நீர் வற்றும் வரை காய்ச்சி, குளிர்ந்த பின்னர், சீசாவில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதனைப் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் வெளிப்பூச்சாகப் பயன்படுத்தி வர வேண்டும்.



கீல்வாயு குணமாக

Ø  இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றடமிட வேண்டும்.


விஷக்கடி வீக்கம் குணமாக

Ø  தேள், பூரான், வண்டுக் கடியால் ஏற்படும் வீக்கத்திற்கு இலையை அரைத்து, சிறிது மஞ்சள் தூள் சேர்த்துப் பிசைந்து பற்றுப் போடலாம்.


வீக்கம், கட்டிகள் கரைய

Ø  அரைத்த இலையுடன் சம அளவு அரிசிமாவு  சேர்த்து  ஒரு விரல் கனத்திற்குப் பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட வேண்டும்.


தலைப் பேன்கள் குறையவும் முடி வளரவும்

Ø  பிஞ்சு ஊமத்தங்காயை, உமிழ்நீர் சிறிதளவு சேர்த்து, அரைத்து, தலையில் தேய்க்க வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்து வர, தலைப்பேன்கள் குறையும். முடி வளரத் தொடங்கும். இது ஒரு பாரம்பரிய வைத்தியமாகும்.


கரு ஊமத்தை Datura metel – blue variety மலைப்பகுதிகளிலுள்ள புறம்போக்கு நிலங்கள், பாழ்நிலங்களில் அரிதாக காணப்படுவதாகும். மிக அரிதாகச் சமவெளிப் பகுதியிலும் வளர்கின்றது. இதன் பூக்கள் ஊதா நிறமானவை. பழங்கள் நீலம் படர்ந்தவை. குறுமுட்களுடன் கூடியவை. இது, இதன் மருத்துவக் குணங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது. சில நேரங்களில் மலர்களின் இதழ்கள் இரண்டு சுற்றுளைக் கொண்டு அடுக்கிதழ்களாகக் காணப்படும். ஊமத்தையின் எல்லா மருத்துவக் குணங்களும் இதற்கு உண்டு.

Please Contact for Appointment