Friday, May 3, 2013

வயிற்றுப்புண் பற்றி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் அவர்களுடன் ஒர் நேர்காணல்






சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் அவர்களுடன் வயிற்றுப்புண் பற்றி ஒர் நேர்காணல்

கேள்வி:- வயிற்றுப்புண் என்றால் என்ன டாக்டர்?
பதில்:-  வயிற்றுப் புண் என்றால் இரைப்பை உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புண் ஆகும். வயிற்றுப் புண், சூலை நோய் எனவும் அழைக்கப்படும்
இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த பகுதியில் ஏற்படும் புண் அல்லது காயம் குடற் புண் (Peptic ulcer) எனப்படுகிறது.

கேள்வி:-  வயிற்றுப் புண்  ஏற்பட காரணம் என்ன டாக்டர்?
பதில்:-  பொதுவாக அமிலம் அதிகமாக சுரப்பதால் வரலாம். ஹைட்ரோகுளோரிக் அமிலம் சிலருக்கு அதிகமாக சுரப்பதால் உடற் செரிமானப் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகின்றன.
v  குடற்புண் உள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதனை அமிலக் குடற்புண் ( Hyper Acidity) என்பர்.
v  ஆஸ்பிரின் மற்றும் இதர NSAIDகள் போன்ற வலி நிவாரனி மருந்துகளால் கூட வயிற்றுப்புண் ஏற்படலாம் அல்லது அதிகமாகலாம்.
v  ஹெலிக்கோபேக்டர் பைலோரி (H.Pylori) எனும் பாக்டீரியாவினாலும் வயிற்றுப்புண் ஏற்படலாம்.
v  புகைபிடித்தல், புகையிலை பொருட்கள் உபயோகித்தல்
v  மது அருந்துதல்
v  வாயுக்கோளாறு
v  நேரம் தவறி உணவு உட்கொள்ளுதல்.
v  அதிகப்படியான காரம், மசாலா எண்ணை உணவுவகைகள் உட்கொள்ளுதல்.
v  மன அழுத்தம், மனக்கவலை,
போன்றவை மிக முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

கேள்வி:- இந்த வயிற்றுப்புண் யாரையெல்லாம் தாக்கும் டாக்டர்?
பதில்:-  பொதுவாக இந்நோய், வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கவல்லது. இதனால், அடிக்கடி வயிற்று வலியும், சாப்பிட முடியாத பிரச்சினையும் ஏற்படும்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி தலைவலி மருந்துகள், உடல் வலி மாத்திரைகளை தாமாகவே மருந்து கடைகளில் வாங்கி உட்கொள்வோரை தாக்கக்கூடும்.

நேரம் தவறி உணவு உட்கொள்பவர்கள், சாலையோரத்தில் விற்கப்படும் தரமற்ற எண்ணையில் வருத்த சிக்கன், அசைவ உணவுகள்,மற்றும் பக்கோடா உணவுகள் உண்பவர்களை தாக்கலாம்.

கேள்வி:-  வயிற்றுப்புண் வந்ததை எப்படி அறியலாம் டாக்டர்?
பதில்:-  மருத்துவர் சில முக்கிய அறிகுறிகள் மூலம் வயிற்றுப்புண் வந்ததை சுலபமாக கண்டுபிடித்துவிடுவார். முக்கியமாக
Ø  வயிற்றில் எரிச்சலுடன் கூடிய கடுமையான வலி
Ø  வயிறு உப்புதல்,
Ø  நெஞ்செரிச்சல்
Ø  மார்பு எலும்பு பகுதிகள் இல்லாதது போல் தோன்றுதல்
Ø  வயிறு வீங்குதல், வயிறு கனத்தல்,
Ø  காரணமின்றிப் பற்களைக் கடித்தல்
Ø  அமிலத்தண்மையுடன் கூடிய ஏப்பம்.
Ø  சாப்பிட்ட உடனேயோ அல்லது சில மணிநேரம் கழித்தோ நெஞ்சு, வயிறு அல்லது குடல் பகுதியில் வலி ஏற்படுதல்.
Ø  அசைவ உணவு உட்கொண்டாலோ அல்லது மசாலா கலந்த உணவுகளை உட்கொண்டாலோ வலி ஏற்படுதல்.
Ø  உணவு உட்கொண்ட சுமார் மூன்று மணிநேரத்திற்குப் பின்னர் அடிவயிற்றில் வலி, (சிறுகுடல் புண்கள் இருந்தால் உணவு சாப்பிட்டவுடன் வலி குறைந்து விடுகிறது, ஆனால் இரைப்பை புண்கள் இருந்தால் சாப்பிட்டவுடன் வலி அதிகமாகும்);
Ø  நெஞ்சுக்கரிப்புஉணவுக்குழாயில் அமிலத்தன்மையுடன் கூடிய நெஞ்செரிச்சல் இருக்கும்.
Ø  குமட்டல் மற்றும் அளவுக்கு அதிகமான வாந்தி;
Ø  பசியின்மை மற்றும் உடல் எடை குறைதல்.
போன்றவை முக்கிய அறிகுறிகளாகும்.

கேள்வி:- குடல்புண்ணில் எத்தனை வகைகள் உண்டு டாக்டர்?
பதில்:-  உணவுக் குழாயில் தோன்றும் குடற்புண்  - வாயிலிருந்து இரைப்பைக்குச் செல்கின்ற வழியில் ஏற்படுவது.
கீழ் வயிற்றுக் குடற்புண் - வாயுக் கோளாறால் ஏற்படுவது.
இரைப்பையின் மேற்பகுதிக் குடற்புண் - இரைப்பை சேதமடைவதால் ஏற்படுவது.
சிறுகுடலில் ஏற்படும் குடற்புண் - இரைப்பையில் சுரக்கும்கேஸ்ட்ரிக் ஜுஸ்எனும் புளிப்புத் தன்மை வாய்ந்த ஒருவகை அமில செரிப்பு நீரின் மூலம் ஏற்படுவது.

கேள்வி:-  வயிற்றுப்புண் வராமல் தடுக்கும் முறைகள் என்ன டாக்டர்?
பதில்:-  முக்கியமாக கீழ்கண்டவற்றை கடைபிடித்தால் குடல்புண்ணைத் தவிர்க்க இயலும்
ü  வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்தல்,
ü  புகைப்பிடித்தலைத் தவிர்த்தல்,
ü  மது அருந்தாதிருத்தல்,
ü  சரியான முறையில் உணவு உட்கொள்ளல்
ü  கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை தவிர்த்தல் போன்றவற்றின் மூலமும் குடல்புண்ணைத் தவிர்க்க இயலும்.

கேள்வி:- சிலர் நிறைய வைத்தியம் செய்தும் வயிறுவலி குணமாகாமல் இருப்பார்கள் அவர்களுக்கு என்ன தீர்வு டாக்டர்?
பதில்:-  இவர்களுக்கு நோயின் தண்மைக்கேற்ப ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை அளித்தால் நல்ல பலனலிக்கும்.

கேள்வி:- ஹோமியோபதியில் வயிற்றுப்புண் நோய்க்கு சிகிச்சை உண்டா டாக்டர்?
பதில்:-  கண்டிப்பாக, ஹோமியோபதியில் மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. ஆரம்ப நிலை வயிற்றுவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். சில வகை வயிற்றுப்புண்னிற்கு மட்டும் அறுவைசிகிச்சை தேவைப்படும். எனவே நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.

கேள்வி:- உங்களின் அனுபவத்தில் வயிற்றுப்புண் சிகிச்சை பற்றி சொல்லுங்களேன்.
பதில்:-  எனது பதினான்கு வருட மருத்துவ அனுபத்தில் நாள்பட்ட வயிற்றுப்புண் மற்றும் ஆரம்பநிலை வயிற்றுப்புண் தொந்தரவால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பெண்கள் என பல நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு ஹோமியோபதி மருந்துகள் மூலம் சிகிச்சை அளித்துள்ளேன். நோயின் அறிகுறிகளுக்கேற்ப மருந்துகளை தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிக்கும்போது நோயிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கேள்வி:- உங்களை எங்கே சந்திக்கலாம் டாக்டர்?
பதில்:- எங்களுடைய விவேகானந்தா கிளினிக் சென்னையிலும், பாண்டிச்சேரி மற்றும் பண்ருட்டியிலும் இருக்கிறது. 9786901830 என்ற கைபேசி எண்னை தொடர்புகொண்டு முன்பதிவு பெற்று என்னை சந்திக்கலாம்.







==--==

Please Contact for Appointment