Thursday, March 7, 2013

பாதுகாப்பற்ற உடலுறவு எய்ட்ஸ் நோயை உண்டாக்குமா?






கேள்வி:
பாதுகாப்பற்ற உடலுறவு எய்ட்ஸ் நோயை உண்டாக்குமா?

பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட மறுநாளே எச்..வி பரிசோதனை செய்தால் எய்ட்ஸ் நோய் தாக்கியதை கண்டுபிடிக்க முடியுமா?

எனது சந்தேகத்தை போக்குங்கள் டாக்டர்.

பதில்:
நீங்கள் ஒரு முறை பாதுகாப்பற்ற உடலுறவு வைத்தாலோ, அல்லது எயிட்ஸ் பாதிப்பிற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டாலோ, குறைந்த பட்சம் மூன்று மாதம் கழித்தே பரிசோதனை செய்ய வேண்டும். நீங்கள் எயிட்ஸ் தொற்றும் சூழ்நிலை ஏற்பட்ட மறுநாளே பரிசோதனை செய்ததால் முடிவு சரியாக இருக்காது. இந்த எச்..வி பரிசோதனை மூன்று மாதங்கள் கழித்தே செய்ய வேண்டும். அபூர்வமாக, சிலருக்கு ஆறு மாதங்கள் கழித்து செய்யும் பரிசோதனையில் தான் அவர்கள் பாதிக்கப் பட்டிருப்பது தெரிய வரும். அதனால் மூன்று மாதம் கழித்து ஒரு பரிசோதனையும் அன்றிலிருந்து ஆறு மாதம் கழித்து ஒரு பரிசோதனையும் செய்துகொள்ளுங்கள். இனிமேல் உங்கள் வாழ்க்கைத் துணையைத் தவிர மற்றவர்களிடம் பாதுகாப்பில்லாமல் உடலுறவு கொள்ளாதீர்கள்.

எச். ஐ. வி பரிசோதனை என்பது உங்கள் ரத்தத்தில் உள்ள எச். ஐ. வி கிருமியை கண்டுபிடிக்கும் பரிசோதனை அல்ல. மாறாக, இந்தக் கிருமியினால் உங்கள் உடலில் உருவாகும் எதிர்ப்பு அணுக்கள் (antibodies) உள்ளனவா என்று தான் பரிசோதிக்கப்படுகிறது. இவ்வாறான எதிர்ப்பு அணுக்கள் (antibodies) ரத்தத்தில் இருந்தால், உங்களுக்கு எச். ஐ.வி உள்ளது என்று முடிவு சொல்லி விடுவார்கள். இதனால் தான் இந்த பரிசோதனையை ஆங்கிலத்தில் “HIV Antibody Test” என்று சொல்லுகிறார்கள். ஒரு முறை உங்களுக்கு எச். ஐ வி கிருமி தொற்றி விட்டால் இந்த எதிர்ப்பு அணுக்களை உங்கள் உடல் உற்பத்தி செய்ய சுமாராக மூன்று மாதங்கள் ஆகும். சிலருக்கு ஆறு மாதங்கள் கூட ஆகலாம்.

பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் குறைந்தது மூன்று மாதம் கழித்தே நீங்கள் எச். ஐ.வி பரிசோதனைக்கு போக வேண்டும். உங்களுக்கு எச். ஐ.வி இல்லை என்று முடிவு வந்தால், மீண்டும் ஆறு மாதம் கழித்து மறுபடி பரிசோதனை செய்து கொள்ள சொல்லுவார்கள். மறக்காமல் அதே போல செய்யுங்கள்.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் பாதுகாப்பில்லாத உடலுறவால் வரும் பிரச்சனையை எண்ணிப் பாருங்கள்.

ஒரு வேளை, துரதிர்ஷ்ட வசமாக “HIV Positive ” என்று பரிசோதனையில் தெரிய வந்தால் உங்களுக்கு எச். ஐ. வி. கிருமி தொற்றி விட்டது என்று அர்த்தம். ஆனால், இதனால் உங்களுக்கு எயிட்ஸ் வந்து வந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. எயிட்ஸ் என்பது இந்த கிருமியின் தாக்கம் முற்றிப் போனால் வரும் கடைசி நிலையாகும். நீங்கள் எச்.ஐ.வி க்கு சரியான மருந்துகளை உட்கொள்ளவில்லை எனறால் இது எயிட்ஸில் போய் முடியலாம்.

ü  உங்களுக்கு எச். ஐ.வி உள்ளது உறுதி ஆகிவிட்டால், நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்.
ü  உடனடியாக ஒரு நல்ல மருத்துவரை அணுகி, எயிட்ஸ் வராமல் தடுப்பது எப்படி என்று ஆலோசனை பெறுங்கள்.
ü  எச்.ஐ.வி தாக்கம் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப் பட்டால், ஓரளவு நல்ல வாழ்க்கைத் தரத்துடன் வாழ வழி உள்ளது.
ü  உங்களின் மூலம் மற்றவர்களுக்கு இந்த கிருமி பரவும் அபாயம் உள்ளது என்பதை அறிந்து பொறுப்புடன் செயல்படுங்கள்.
ü  எச்.ஐ.வி தாக்கி விட்டால், நீங்கள் தனி மரம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
ü  தகுந்த உளவியல் ஆலோசனை, முறையான சிகிச்சை, குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் நல்ல வாழ்க்கை அமைய உறுதுனையாக இருக்கும்.







விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
9786901830
Vivekanantha Clinic Health Line

Please Contact for Appointment