Friday, October 25, 2013

நான் தோல் பூஞ்சை நோய் எனப்படும் காளான் தொற்றுநோயால் அவதிப்படுகிறேன். காளான் நோயை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா டாக்டர்?







கேள்வி: நான் தோல் பூஞ்சை நோய் எனப்படும் காளான் தொற்றுநோயால் அவதிப்படுகிறேன். ஆங்கில மருந்துகள் பல உபயோகித்துவிட்டேன் பலனில்லைகாளான் நோய் வர காரணம் என்ன? காளான் நோயை நிரந்தரமாக குணப்படுத்த முடியுமா டாக்டர்?

மருத்துவர் பதில்: பலருக்கு இந்த காளான் நோய் தொற்று இருக்கிறது. தோல் பகுதியில் வட்ட வடிவத்தில் இந்த காளான் தொற்று பாதிப்பு இருக்கும்.

இந்த பாதிப்பானது பெரும்பாலும் சுகாதாரமின்மையால் வருகிறது, குளித்து முடித்த பின்னர் சரியாக துடைக்காமை, சுத்தமற்ற தண்ணீரை உபயோகிப்பது, ஈரமான உள்ளாடைகளை உடுத்துவது போன்றவைதான் காரணமாகும்.

காளான் நோய் தொற்று பாதிப்பானது உடம்பில் தொடைப் பகுதி, அக்குள், இடுப்புப் பகுதி, போன்ற இடங்களில் ஏற்படலாம். அதிகமாக வெளியே தெரியாத பகுதிகளில்தான் இந்த பாதிப்பு ஏற்படும் என்பதால் இதற்கு சிலர் சரிவர மருத்துவம் பார்த்துக் கொள்வதில்லை. ஆனால் பொது இடங்களில் இருக்கும்போது அவர்கள் அறியாமலே சொரிவதற்காக கை அந்த இடங்களுக்கு செல்வதை இவர்களால் தடுக்க முடியாது. எனவே இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.


இதற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் சிறந்த உள், வெளி மருந்துகள் உள்ளன. எனவே  ஹோமியோபதி மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை மேற்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.






மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்









==--==


Please Contact for Appointment