Thursday, December 18, 2014

CEANOTHUS – சியோனோதஸ்





 CEANOTHUS  – சியோனோதஸ்











CEANOTHUS  – சியோனோதஸ்

இவர்களை பார்த்தால் மண்ணீரல் நோயினால் தாக்கப்பட்டு மலேரியா காய்ச்சல் ஏற்பட்டு அதிலிருந்து மீள முடியாதவர்களாக இருப்பார்கள். இதற்கு முன்பு பார்த்த மருந்துகளில் கல்லீரல் தாக்கப்பட்டு சரும நோயோ, காமாலையோ ஏற்பட்டதோடு உடன் மலேரியா காய்ச்சல் ஏற்பட்டதை பார்த்தோம். இந்த மருந்து மண்ணீரல் (SPLEEN) தாக்கப்பட்டு தோன்றும் மலேரியா காய்ச்சல். இது காமாலையை சார்ந்ததாக இருக்காது. இந்த மருந்து தேவைபடுபவர்கள் பொதுவாக சோகை பிடித்த மாதிரி இருப்பார்கள் அவர்களுக்கு இது பொருந்தும். மற்றும் கல்லீரல் சம்பந்தபட்ட நோய்களும் கூட தோன்றலாம். மண்ணீரலின் வேலை கழிவை வெளியேற்றுவது. அந்த வேலையை அது செய்யமுடியாமல் போய், அதனால் மண்ணீரல் வீங்கி இதன் கழிவானது நுரையீரல் வரைக்கும்; போய் அதுவும் கெட்டு அது சம்பந்தப்பட்ட நோயும் ஏற்படும். இவர்களுடைய இரத்தம் அளவு குறைவாக இருப்பதினால் தங்கி, தங்கி ஓடற மாதிரி தெரியும். இதனால் இரத்த சோகையிருக்கும். இவர்களுக்கு இது திடீர்ன்னு ஏற்படும் வகையை சார்ந்தது இரத்; அளவு குறைந்ததனால் தோன்றும் மலேரியா காய்ச்சல். மண்ணீரல் என்பது இரத்தத்தின் உடைந்த செல்களை அரைக்கின்ற ஓர் உறுப்பு. உடைந்த செல்களின் அழுக்கினால் சரியாக வேலை செய்யாத காரணத்தினால் தான் மலேரியா காய்ச்சல் தோன்றுகிறது. இரத்தம் குறைவின் காரணமாக குழ, குழப்பு தட்டி, கட்டி தட்டி விடுகிறது. வயிறு:- இடது புற மேல் வயிறு வீங்கி இருக்கும். அதற்கு காரணம் மண்ணீரல் வீக்கம் தான். தொட்டு சொல்லுவாங்க இங்கு வெட்டற மாதிரி வலிக்குது என்று. இதனால் சிகப்பு அணுக்கள் குறைந்து விடுவதால் வெள்ளை அணுக்கள் அதிகமாகிவிடும். விகிதாசாரத்தில் சிகப்பு அணுக்கள் குறைந்து விடுவதால் பயங்கரமான மூச்சடைப்பு ஏற்படும். பெண்:- மாத விலக்கு ஏராளமாக போயும், வெள்ளைப்பாடு நிறைய போயும் இந்நிலை ஏற்படும். இதனால் இடது புறம் படுக்க முடியலை வலிக்குதுங்க என்பார். பின்பு கல்லீரலையும் தாக்கும். மலக்குடல்:- பேதியில் கூட முக்கி, முக்கி மலம் கழிவார். ஆதனால் ஆஸன வாய் மலக்குடல் பிதுங்கிற மாதிரியிருக்கும். பிதுங்கியும் விடும். சிறுநீர்:- சிறுநீர் உறுப்பு கெட்டு அவசரமாக ஒண்ணுக்கு வரும். அதனால் வேகமாக ஓடுவார்கள். சிறுநீரை பார்த்தால் பச்சை நிறமாகவும், விட்ட இடத்தில் நுரையாகவும், பித்தமே கொட்டிவிட்ட மாதிரி நிறமும் இருக்கும். இனிப்பாவும் இருக்கும், அங்கு , எறும்பும் முய்க்கும். இது சக்கரை வியாதி காரர்களுக்கு பொருந்தலாம். உறவு:- மூத்திர காய் வியாதிகளை அதாவது, மூத்திரத்தை அடக்குவதற்க்கு என்று பலவித மருந்துகளை சாப்பிட்ட பின்பும், சந்தர்ப்பத்தின் காரணமாக மூத்திரத்தை அடக்கி, அடக்கிய பின் தோன்றும் உறுப்புகளின் பலஹீனம,; குளிர் காய்ச்சலுக்கு பிறகு இரத்தம் கெட்டு மண்ணீரல் பாதிக்கப்படும். மண்ணீரல் வீங்கி கெட்டியாகி விடும். இதன் பிறகு இப்படி வரும் குளிர்காய்ச்லுக்கு இது மருந்து. மண்ணீரலிலும், இரத்த தேக்கத்தினால் கல் தோன்றிவிடும். பித்தக்கல், சிறுநீர் கல் மாதிரி இதிலும் தோன்றிவிடும். இதனால் கல்லீரலும், மற்ற உறுப்புகளும், நாளமில்லா சுரப்பிகளும் கூட பாதிக்கப்படும். எல்லா நோய்களுக்கும், இந்த அசுத்தமே காரணம். டான்சில், சளி, தொண்டையடைப்பான் நோய்களுக்கும் இதை 3x வீரியத்தில் கொடுக்கலாம். பூண்டு அதிகம் சாப்பிட்டவர்களுக்கும் இது பொருந்தும். உறவு:- BER-V, MIAST, CED, AGAR. இந்த நான்கு மருந்தே போதும். சிறுநீர், மண்ணீரல் தொல்லைகளுக்கு நகரவும், இடது பக்கம் படுக்கவும் கஷ்டம்.





 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------






Please Contact for Appointment